கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள்

 

கொரோனா நோய்  வந்தவர்களும்  கொரோனா நோய் வராதவர்களும் கொரோனா  நோயிலிருந்து எப்படி நம்மை பாதுகாத்து கொள்ள  வேண்டும்.

இதை  எல்லோரும் கண்டியாக கடை பிடிக்க வேண்டும். இது  என்னமோ ஒரு ஜுரம் வந்தது போனது ஒரு மலேரியா வந்தது போனது என்று இல்லாமல் இந்த கொடிய நோயானது நமது உள் உறுப்புக்கள் எல்லாவற்றையும் கெடுத்து விட்டு செல்கிறது. இந்த நோயானது ஒரு சில மனிதர்களின் பேராசையால் உற்பத்தி செய்யப்பட்டது ஏன் என்றால் முதலில் நோய் உற்பத்தி செய்வது பிறகு அதற்கு மருந்து அவர்களே கொடுப்பது. இது தான் அவர்கள் நோக்கம்

ஊசி போட்டு கொண்டால் மட்டுமே உயிர் வாழ முடியும் ஊசி போடவில்லை என்றால் மரணம் கண்டிப்பாக உண்டு அதனால் ஊசி எல்லோரும் போட்டு கொள்ள வேண்டும் .ஊசி போட்ட பின் வரும் விளைவுகள் மிகவும் கொடுமையானது . நம்முடைய மரபணு முற்றிலுமாக மாறிவிடும் அதாவது ஊசி போடு கொண்டவர்களுக்கு உடல் ரீதியாக நிறைய பின் விளைவுகள் உள்ளது. ஆண்களுக்கு ஆண்மை குறைவு , பெண்களுக்கு கருப்பை சம்பந்தமான பிரச்னைகள், பிறக்கும் குழந்தைகள் அங்க ஈனம், நுரை ஈரல் சுருங்குதல் போன்ற பல பிரச்னைகள் உண்டு இவை அனைத்தில் இருந்தும் விடுபட நாம் நமது பாரம்பரிய உணவு வகைகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.

மறுபடியும் இந்த உறுப்புகள் எல்லாம் மீண்டும் சரியாக ரொம்ப காலம் ஆகும் மேலும் இவை அனைத்திற்கும் நமது உணவு பழக்க வழக்கங்கள் மாற்றி கொள்ள வேண்டும்.இப்படி செய்தல் மட்டுமே நமது உள்  உறுப்புகள் சீரடையும்

 

தினமும் சாப்பாட்டில் வழி முறைகள்

·        தினமும் சாப்பாட்டில் கீரை வகைகளை சேர்த்து கொள்ள வேண்டும் கன்னி தன்மை உள்ள கீரைகள் அதாவது  பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, முருங்கை கீரை, பசலை கீரை, பருப்பு கீரை சேர்த்து கொள்ள வேண்டும்.

·        வெள்ளை பூசணி தினமும் பச்சையாக சாப்பிட வேண்டும்.

·        நெல்லிக்காய்   தினமும் சாப்பிட வேண்டும்.

·        நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்  முருங்கை பிசின் வாங்கி வந்து அதை தண்ணீரில் கலந்து வைத்து விட்டு அந்த தண்ணீரை குடிக்க வேண்டும்.

·        தினசரி பாலில் மிளகு மஞ்சள் பூண்டு  சேர்த்து காய்ச்சி குடிக்க வேண்டும்.

·        தினமும் தேங்காய் கடுக்காய் பொடி கிராம்பு மூன்றையும் மிக்ஸியில் அரைத்து சுடு தண்ணீர் கலந்து குடிக்க வேண்டும் இது உடம்பில் ஆக்சிஜென் அளவை கூட்டும்.

·        தினமும் ராத்திரி ஒரு கிளாஸ் தண்ணீரில் இரண்டு கருந்துளசி இலை போட்டு வைத்து காலையில் அந்த இலை மற்றும் தண்ணீர் குடிக்க வேண்டும்.

·        காலை எழுந்தவுடன் பல் விளக்குவதற்கு முன் நல்எண்ணெய் கொண்டு வாய் கொப்பளிக்க வேண்டும் இதை ஆயில் புல்லிங் என்பார்கள். இதை வாரம் ஒரு முறை செய்ய வேண்டும்.

·        மூச்சு பயிற்சி தினமும் செய்ய வேண்டும்.

·        நடை பயிற்சி தினமும் செய்ய வேண்டும்.

·        எல்லோரும் கண்டிப்பாக கொஞ்சம் காலங்களுக்கு பிராய்லர் கோழி சாப்பிட கூடாது. 

·        காலையில் இஞ்சி கடும்பகல் சுக்கு மாலையில் கடுக்காய் என்பது நோயில்லாத ஆரோக்கியமான உடலுக்கு ஏற்ற வைத்திய முறை.

·        உடல் ஆரோக்கியம் சீராக இருக்க காலையில் இஞ்சியும், கடும்பகல் சுக்கும், மாலையில் கடுக்காயும் மிகச்சிறப்பாக உதவும்.

 

 கடுக்காய். நாட்டு மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கும் அருமருந்து கடுக்காய். கடுக்காயை வாங்கி வந்து தோல் நீக்கி தோலை இடித்து பயன்படுத்த வேண்டும். இதை மாலையில் என்று சொல்வதை காட்டிலும் இரவில் பயன்படுத்தலாம். இரவு இரண்டு கடுக்காயை இடித்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து பாதியாக சுண்ட காய்ச்சி விடவும். பிறகு இதை குடிக்க வேண்டும். தினமும் குடிக்கலாம். பக்கவிளைவுகள் இருக்காது.கடுக்காய் உடல் கழிவை வெளியேற்றும். மலம் உடலில் தங்காமல் வெளியேற்ற தூண்டும். வாய்வு பிரச்சனைகளை போக்கும். மூலப்பிரச்சனை கடுமையாக இருந்தால் கூட அதை சரிசெய்யும் குணம் கடுக்காய்க்கு உண்டு.

 

 

 

மூலிகைகளில் திருநீற்று பச்சிலை குப்பைமேனி தும்பை கரிசலாங்கண்ணி சிறுசெறுபடை  அகத்திய ஐந்து மூலிகைகளை சாப்பிட  வேண்டும்  இந்த மூலிகைகளை சாப்பிடும் முறை உள்ளது அது என்னவென்றால்

·        திருநீற்று பச்சிலை 1/4 பங்கு ,

·        குப்பைமேனி 1/2 பங்கு,

·        தும்பை 3/4 பங்கு,

·        கரிசலாங்கண்ணி 1 பங்கு ,

·        சிறுசெறுபடை 1 1/4 பங்கு   

 

இதை காலை மாலை  இருவேளை தேன்  அல்லது நெய் கலந்து ஒரு சிட்டிகை அளவு சாப்பிட வேண்டும் இது நம் உல் உறுப்புகள் ஆனா  மூளை,நுரையீரல் ,ஈரல் , கிட்னி ,கணையம்  அனைத்தையும் சரி செய்யும். ஔவையார் அருளிய கடவுள் வாழ்த்து பாடலில் இந்த மூலிகைகளை பற்றி கூறி உள்ளார் அதன் விளக்கம் முழுவதுமாக கூறி உள்ளேன்

 

 

ஔவையார் அருளிய கடவுள் வாழ்த்து

 

 

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்

நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு

துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமற் சார்வார் தமக்கு

 

பதவுரை:

 

வாக்கு உண்டாம் - சொல்வளம் உண்டாகும்

 

நல்ல மனம் உண்டாம் - நல்ல சிந்தனை உண்டாகும்

 

மாமலராள் - பெருமை பொருந்திய செந்தாமரைப்பூவில் அமர்ந்திருக்கும் திருமகளின்

 

நோக்கு உண்டாம் - அருட்பார்வை உண்டாகும்

 

மேனிஉடம்பு

 

நுடங்காது - (பிணிகளால்) வாட்டமுறாது

 

பூக்கொண்டு - மலர் கொண்டு

 

துப்பார் (துப்பு + ஆர்) - பவளம் போன்ற சிவந்த (துப்பு - சிவப்பு; ஆர் - நிறைந்த)

 

திருமேனி - திருமேனியையும் தும்பிக்கையான் - துதிக்கையை உடைய விநாயகக் கடவுளின்

 

பாதம் - திருவடிகளை

 

தப்பாமல் - நாள்தோறும் தவறாமல்

 

சார்வார் தமக்கு - அடைந்து பூஜை செய்வோருக்கு

 

 

 

பொருளுரை: பவளம் போன்ற திருமேனியையும் துதிக்கையை உடைய விநாயகக் கடவுளின் திருவடிகளை நாள்தோறும் தவறாமல் அடைந்து பூஜை செய்வோருக்கு சொல் வளம் உண்டாகும், நல்ல சிந்தனை உண்டாகும், பெருமை பொருந்திய செந்தாமரைப்பூவில் அமர்ந்திருக்கும் திருமகளின் அருட்பார்வை உண்டாகும், உடம்பு பிணிகளால் என்றும் வாட்டமுறாது

 

 அவ்வையார் இதில் மூன்று விஷயங்களைக் கூறுகிறார்.

 

அவை முறையே

 

1.      பக்திநெறி.

 

2.      கற்பநெறி.

 

3.      யோகநெறி.

 

 

இந்த பாடலில் கற்பநெறி ஐந்து மூலிகைகளை பற்றி மேலும் கூறுகிறார்

 

 மேலோட்டமாகப் பார்த்தால் நாம் விநாயகரை வணங்க வேண்டும் என்று பொருள்படும் ஆனால் இந்த ஐந்து வகை மூலிகைகளும் பஞ்சபூத மூலிகைகள் எனப்படும்.

அவை

 

1.      திரு

 

2.      மேனி

 

3.       தும்பிக்

 

4.      கை யான்

 

5.       பாதம்

 

 திரு என்றால் திருநீற்று பச்சிலை இது பஞ்சபூதத்தில் ஆகாய தன்மை உடையது.

 

மேனி என்றால் குப்பைமேனி காற்று சக்தி உள்ளது.

 

தும்பி என்றால் தும்பை நெருப்பு சக்தி உள்ளது.

 

கையான் என்பது கரிசலாங்கண்ணி இது நீர் சக்தி உள்ளது.

 

பாதம் என்பது சிறுசெருபடை மண் சக்தி உள்ளது

 

இந்த கொடூரமான கொரோன நோயிலிருந்து நம்மை காத்து கொள்ள இதுவே சிறந்த வழி ஆகும்.

 

இந்த சிறந்த மருந்தை கொரோன  நோய் வந்தவர்களும் நோய்  வந்து போனவர்களும் கண்டிப்பாக சாப்பிட வேண்டும் ஏனென்றால் நோய் வந்த பிறகு நமது முக்கிய ஐந்து உறுப்பு ( மூளை  - நுரையீரல்கணையம்சிறுநீரகம் - கல்லீரல் )மிகவும் பலவீனமாக இருக்கும்.இந்த மருந்து மட்டும் தான் இது பலப்படுத்தும்.

 

இந்த மூலிகைகளை தினமும் தேன் கலந்து காலையும் மாலையும் ஒரு சிட்டிகை அளவு சாப்பிட வேண்டும்.

 

கருத்து: இந்த காயசித்தி மூலிகையை காலை மற்றும் மாலை சாப்பிடுவோருக்கு எந்த நோயும் நெருங்காது.

 

விநாயகர் கடவுளை வழிபட்டு இந்த மருந்து சாப்பிடுவோர்க்கு எல்லா நலன்களும் உண்டாகும்.எல்லோரும் கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.